Showing posts with label nice lines. Show all posts
Showing posts with label nice lines. Show all posts

Wednesday 4 May 2016

பெண்ணல்ல நீ எனக்கு




..
நாள் தவறி போனதே என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..
மார்பில் முகம் புதைத்ததும்
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..
புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..
மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..
ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..
ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..
மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய்விடுமா உன் அழகு தாய்மையில்..
ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?
தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..
நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!
இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..
சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..
தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..
அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..
சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்..
இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்
பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!
பெண் குழந்தை நீ பெற்றாய்
பேரின்பம் நான் பெற்றென்..
முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..
அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்
புரியவில்லை அக்கணம்..
வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?
யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..
30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி மூத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..
பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..
அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..
தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..
ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!



Tuesday 14 July 2015

Hikoo- எல்லாம் பிடிக்கிறது



உன் காதல்
உன் பேச்சு
உன் அக்கறை
உன் கவனிப்பு
உன் நிதானம்
உன் திறமை
எல்லாவற்றிறுக்கும் மேலாக
தொலைதூரமாக இருந்து
நீ என்னைப்பார்ப்பதும் பார்க்காமல்
போல் நடிப்பது கூட.....

Monday 1 April 2013

இணைந்திடுவோம் புதியநட்பில்..!

என் வெற்றியை
தன் வெற்றியாய்
கொண்டாடும் உன்இனிய
நட்பினை தொலைத்துவிட்டேன்..!

என் துயில்வரை
உன் துயில்தொலைத்து
நீ அனுப்பும் குறுஞ்
செய்திகளை இழந்துவிட்டேன்..!

என் சோகங்களை
தூரமாய் அனுப்பும்
உன் அழகு முகச்சிரிப்பின்
முகவரியை கிழித்துவிட்டேன்..!

நாம் என்று
இருந்த நட்பை
ஏதேதோ காரணத்தினால்
நான்-நீ'யென்று மாற்றிவிட்டேன்..!

இவ்வளவு வலிக்குமென்று
சண்டைமுடிவினிலே தெரிந்திருந்தால்
மறுகணமே சொல்லியிருப்பேன்
மன்னித்துவிடுயென்று நானாக-முன்வந்து..!

இனிவேண்டாம் நம்வாழ்வில்
இதுபோல ஒருபிரிவு
இணைந்திடுவோம் புதியநட்பில்
இலக்கணமாய் அனைவருக்கும்..!!

அன்புத் தோழிக்காக சில வரிகள்.......


எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை
என்னை விட்டு ஏனோ நீ
விலகியதும் இல்லை !

தொடர்ந்து என்னுடன் நீ
தொடர்பில் இல்லை !
என் தொடர்பு இல்லாது நீ இல்லை!

பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,!
பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க

 நீ முயலாமலும் இல்லை !
"அழும் வரை அழுதிடு "
அடுத்த நிமிடம்
உடனே சிரித்திடு என்பாய்!

சில சமயம் ..........
தோள்மீது கை போட்டு
நீ என் தோழன் என்பாய்!

சிலசமயம்........
கன்னத்தில் அடித்துவிட்டு 

நான் கோபித்துக்கொண்டால்,
மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் !

நான் கவிதைகள் சொல்லும்போது
காதைப் பொத்திக்கொண்டு
அருமை என்பாய்!

கண்ணீர்விட்டு நான் அழும்போது,
காரணங்கள் ஏதுமின்றி
நீயும் கரைவாய்!

என் தேர்வு நாட்களில் எல்லாம் ,
வெகு சீக்கிரம் எழுவாய்!
என் தேவைகளை புரிந்து
புன்முறுவல் தருவாய் !

முடியாது என்று நான்
முடங்கும் போதெல்லாம்,
"முயல் ஆமை " கதை சொல்லியே
என்னைக் கொல்வாய் !
இறுதியில் நீயே வெல்வாய் !

உடைபட்ட கல்லாய் இருந்த என்னை
"உளியாக" நீ உருமாறி,
மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி
உயிர் தந்தாய்!

என்னைப் பிடிக்கவில்லை என்று
சொன்ன "என்னவளை "
என் எதிரே திட்டித் தீர்த்தாய்!
ஆனால் எனக்குத் தெரியாது
அவளிடம், தினம் தினம்
கெஞ்சித் தோற்றாய்!

என்னவளின் திருமண நாளை
எனக்குத் தெரியாது
மறைக்கப் பார்த்தாய் !
எனக்குத் தெரிந்த பின்
என்னைத் தேற்ற இயலாது
இறுகக் கட்டி அழுது தீர்த்தாய்!

நல்ல வேலை வாங்கித் தந்தாய்!
நாளை எப்படி இருக்கும் என்று
சொல்லித் தந்தாய் !

ஒரு நாள் திருமண பந்தத்தில்
கலந்து போனாய்......
உன் நண்பனை விட்டு
பிரிந்தும் போனாய்.....
மாறாத நம் நட்பை,
மறந்தும் போனாய் !
என்றாலும் ..... எது நீ செய்தாலும் ,
அதிலொரு ஏற்றமிகு
வினை இருக்கும் என்று....
அமைதியாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையை.........

தோழியே நீ
சொல்லிக் கொடுத்தபடி!
இப்படிக்கு
உன் நண்பன் ..
---Rajesh.

Sunday 10 February 2013

அன்பு செய்யுங்கள் யாருக்கும் அடிமையாகாதீர்கள்


 

இரக்கம் காட்டுங்கள்;எவரிடத்தும் ஏமாந்துவிடாதீர்கள்..
பணிவைப் போற்றுங்கள்;எந்த நிலையிலும் கோழையாகாதீர்கள்..
கண்டிப்பாக இருங்கள்;எப்போதும் கோபப்படாதீர்கள்...
சிக்கனமாக வாழுங்கள்;கருமியாக மாறாதீர்கள்...
வீரமாக இருங்கள்;போக்கிரிகளாக மாறாதீர்கள்...
சுறுசுறுப்பாக இருங்கள்;பதட்டம் அடையாதீர்கள்...
தர்மம் செய்யுங்கள்;ஆண்டியாகி விடாதீர்கள்...
பொருளைத் தேடுங்கள்;பேராசைப்படாதீர்கள்...
உழைப்பை நம்புங்கள்;உருப்படுவீர்கள்...
உண்மையை நம்புங்கள்;உயர்வடைவீர்கள்...

Tuesday 11 September 2012

Nice Lines

*அழகான உருவங்களைக் கண்டு ஏங்காதீர்கள்-அங்கே
 ஆணவம் தலைதூக்கி நிற்கின்றது.
 அழகற்ற உருவங்களை ஒதுக்காதீர்கள்-அதற்குள்ளே
 ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.



 *என்னை நேசிக்க ஒருவர் இல்லையே என்று எத்தனை
   உள்ளங்கள் தவிக்கின்றன....

 அதே வேளையில் நான் அன்பு செலுத்த   ஒருவரும் இல்லையே        என்று  எத்தனை பேர் தவிக்கிறார்கள்...
"நாம் நேசிப்பவர்களாகவும் நேசிக்கப்படுபவர்களாகவும் இருப்போம்"

Popular Posts