Thursday 1 September 2016

அவள்..

மழலையின் உருவமானாள்..!
குறும்புகளின் ஊற்றானாள்..!
மகிழ்ச்சிகளின் இருப்பிடமானாள்..!
எங்கள் வீட்டின் இளவரசியானாள்..!
பட்டாடையில் பேரழகியானாள்..!
நான் கதை சொல்லி உறங்க
வைக்கும் குழந்தையானாள்..!
என் கண்ணீரை மறைய
வைக்கும் மந்திரமானாள்..!
துள்ளித் துள்ளித் திரியும் மான்களானாள்..!
தலை கோதும் விரல்களானாள்..!
தாலாட்டி உறங்க வைக்கும் அன்னையானாள்..!
சண்டை போடும் குட்டி ராட்சசியானாள்..!
என் விரல் பிடித்து நடக்கும் உயிரானாள்..!
என்றும் எனக்காக துடிக்கும் இதயமானாள்..!
அவள்..
என் செல்ல தங்கையானாள்..!!

Wednesday 4 May 2016

மீண்டும் ஒரு திருமணம்

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால்
இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!
" அப்படி இந்த அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய ‪#‎பாசம்‬ இருக்கும்..
ஆனால்..
"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு
நாட்கள் ஆகிறது இந்த இப்போதைய அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!
பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...!!
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்..

Popular Posts