Saturday 1 September 2012

நம் நட்பு


"என்ன செய்தேன் உனக்கு! ஏன் என் மேல் 'அன்பு' வைத்தாய்?
புலம்ப வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'புனித நட்பு' கொண்டாய்..?
தவிக்க விட்டேன் உன்னை! இருந்தும் ஏன் என்னை 'மகிழ்ச்சி தண்ணிரில்' மிதக்க விட்டாய்?
மிரள வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'மிரட்டும் பாசம்' வைத்தாய் ?
கலங்க வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'களங்கமில்லா நேசம்' வைத்தாய்?"
ஆனால், உனக்காக செய்வேன் 'ஒன்றை மட்டும்'....!
"கொடுத்துவிடுவேன் என் உயிரையும் 'என்றும் உன்னை காக்க'....!"

கல்லூரி கால நட்பு


"அன்று(During College Life).......
நான் அழுத போதெல்லாம் என் கண்ணீரை துடைத்த முதல் கை என் நண்பன்..!!!
வீழ்ந்த போதெல்லாம் தோள் கொடுத்து தூக்கி விட்டவன் என் நண்பன்..!!!
தோற்கும் போதெல்லாம் தட்டி கொடுத்து நம்பிக்கை தந்தவன் என் நண்பன்..!!!
மற்றவர்கள் எதிர்த்த போதெல்லாம் என் முன்னே நின்று என்னை காத்தவன் என் நண்பன்...!!!

ஆனால் இன்றோ.....(After College Life...A few years after that...)

"என் சிரிப்பை பகிர்ந்துகொள்ள மட்டும் நீ இல்லையே....!
ஏங்குகிறேன் நண்பா! இருந்து விடு என்னுடன் என்றும்..."

Popular Posts