Posts

Showing posts with the label tamil kavithai

பெண்ணல்ல நீ எனக்கு

Image
.. நாள் தவறி போனதே என நீ வெட்கத்தோடு உரைத்ததும்.. மார்பில் முகம் புதைத்ததும் மேடிட்ட வயிறு கண்டு முத்தமிட்டு சிரித்ததும்.. புளிப்பு மாங்காய் வேண்டுமென காதோரம் சொன்னதும் கண்ணுக்குள் ஆடுதடி.. மூன்றாம் மாதம் முதல் நீர் இறைக்க தடை போட்டேன்.. ஐந்தாம் மாதம் முதல் கனம் தூக்க தடை போட்டேன்.. ஏழாம் மாதம் தனில் சீமந்தம் செய்தார்கள்.. மஞ்சள் பூசி, வளவி இட்டு திருஷ்டி சுற்றி போட்டாலும் போய்விடுமா உன் அழகு தாய்மையில்.. ஆண்டவன் இருந்திருந்தால் அப்பொழுதே கேட்டிருப்பேன் ஏன் படைத்தாய் ஆண் எனவே மண்ணில் என்னை? தினமும் மாலை கை கோர்த்து நடை பயின்று.. இரவெல்லாம் கண் விழித்து மடி மீது உறங்க வைத்தேன் தாயென்றே உனை.. நாட்கள் நெருங்க, நெருங்க கலவரம் கண் மறைத்து நம்பிக்கை கை பற்றி மார்பனைப்பேன் என் உயிரே..! இறுதியாய் பல் கடித்து வலியென நீ புலம்புகையில் ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை வரும் முன்னே வியர்த்தொழுகும் முகமெல்லாம்.. சில நொடி பொழுதுகளில் வந்தனரே உன் தாயும், என் தாயும் உறவினரும் நண்பருமாய்.. தனியறைக்குள் நீ செல்ல கதறும் ஒலி கேட்டு தாங்கவும் முடியாமல் தனியிடம் அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல் ந...

பெருமகிழ்ச்சி ( Tamil Kavithai)

Image
மரத்தில் எஞ்சியிருக்கும் கடைசி இலைக்கு பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா? வாய்க்கும். உச்சிவெயிலில் தரையில் ஒரு சிற்றெறும்பு நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம். காற்றில் ஆடியபடி தொடர்ச்சியாக எறும்பின் பாதையில் நிழலிட அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம். ஆட்டத்தின் உச்சத்தில் இலை மரத்தை விட்டு அகலலாம். அப்போதும், ஓர் குடையாய் எறும்பின் மேலேயே விழ வாய்த்தால், தாய் வந்து குட்டியை ஒளித்ததற்காக கண்சிவக்க கோபிக்கும் வரை அந்த இருப்பு தொடருமானால், அதுவே பெருமகிழ்ச்சி. - வீரன்குட்டி.

Hikoo (என்னமோ தெரியவில்லை இன்றென்னை விரட்டி விரட்டி இந்தக் கவிதை தொந்தரவு செய்கிறது)

Image
தேர்வென்றும் நோயென்றும் நீ சொன்ன ஏதேதோ காரணங்களால் பேரன்களை மருமகளை நீ அழைத்து வராமைக்கு சமாதானப் பட்ட இந்தப் பாழும் கிழவிக்கு பத்து நாள் பிடித்தது உன்னையே நீ அழைத்து வரவில்லை என்ற உண்மை பிடிபட....

Hikoo- எல்லாம் பிடிக்கிறது

Image
உன் காதல் உன் பேச்சு உன் அக்கறை உன் கவனிப்பு உன் நிதானம் உன் திறமை எல்லாவற்றிறுக்கும் மேலாக தொலைதூரமாக இருந்து நீ என்னைப்பார்ப்பதும் பார்க்காமல் போல் நடிப்பது கூட.....

ஆயிரத்தில் நானும் ஒருவன் (Share your views)

Image
எனக்கு கிடைத்தால் போதுமென்று(!) கூட்ட நெரிசலில் பேருந்தின்  இருக்கை நோக்கியோடும் பல  ஆயிரம் வீரர்களில் நானுமொருவன்..! வயதான பலர் தள்ளாடும் நிலை  கண்டும் எழுந்து இடம் விடாதே!  என்று  சுயநல முடிவெடுக்கும்-பல  நல்ல(!) மனிதர்களில் நானுமொருவன்..!    கண்முன்னே நடக்கும் அநியாயங்கள் நல்லவேளை எனக்காக வில்லையென   காதிருந்தும் செவிடனாக்கும் கருவிமாட்டும் கனிவுள்ள(!) மனிதர்களில் நானுமொருவன்..! கேரளாயென்ன கர்நாடகா யென்ன  தண்ணீர்த்தர யார் மறுத்தால்  தனக்கென்ன என்று எண்ணும்  பகுத்தறிவாளர்கள்(!) பலருள் நானுமொருவன்..! இல்லாதவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க  ஓராயிரம் முறை யோசித்து-எல்லாம்  இருக்கும் காதலிக்கு இலட்சங்கள்  பரிசளிக்கும் ரோமியோ(!)களில் நானுமொருவன்..!  - Anbuselvam @ Saran 

Tamil Kavithai - Enaku Vidai Naane(எனக்கு விடை நானே)

தோற்றமோ மாற்றமோ   நிலைகளோ நியதியோ தினம் தோன்றும் எண்ணப் பிழைகளோ என்னவென்று நானறியேன் என் வார்த்தைகள் என்னுடன் பேசுகின்ற சத்தம் மனதில் சிறு புன்னகை முகத்தில் பதித்து, மன அலைகளை நிறைத்தேன் விழியில் பெற்றோர்க்கு புதிதானேன் நண்பர்களுக்கும் புதிரானேன்  உயிர் தோழிக்கும் கேள்வி குறியானேன், எனக்கு நானே பதிலானேன் வெறுமை களைந்து , கனவுகள் அணிந்து புதிய கண்ணோட்டத்தில் அன்றாட செயல்கள் காண பாதைகள் கண்டேன் -அவை என்னை வரவேற்று அணைக்கக் கண்டேன் நல்ல மாற்றங்களால் தினம் நாட்களை அலங்கரிக்கும் கலையை கற்றேன் கவலை மறந்தேன் வலிகள் என்னை சந்திப்பதுண்டு சில நேரம் வந்து போகும் தலைவலி போல சில நட்புகள் தந்து போவதுண்டு மருந்து போன்ற உடனிருப்பை உலகம் அழகு வரங்கள் பெரிது –இங்கு அலைபாயாமல் , அதிகம் யோசிக்காமல் அமைதியாய் நன்றி சொல்ல காரணங்கள் கணக்கற்றது நாம் நினைத்தால் என்னை தேடிவரும் எனக்கான நன்மைகள் தினம் அவற்றை அனுபவித்துச் செல்வதேயன்றி என்னை தொலைத்து எதையும் தேட என்றும் அவசியம் இல்லை உலகில் விமர்சனங்களை கண்டு சிரிக்கிறேன் வலிமையை ...

Tamil Kavithai- Pirivugal En Parvaiyil (பிரிவுகள் என் பார்வையில்)

Image
சிறகிலிருந்து பிரியும் ஓர் இறகு மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை மேகத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளி ஏனோ வார்த்தைகளின்றி ஊமையான இவற்றால் சத்தமாய் அறிவிக்க முடியும் நிஜங்களை விரிந்த சிறகில் சேர்ந்து அந்த இறகு வானில் பறந்த நாட்கள் பொய்யன்று தனியாய் உதிர்கையில் காற்றில் அது எழுதிச் செல்லும் நினைவுகளின் காவியமும் பொய்யன்று அடர்ந்த மரத்துடன் சேர்ந்து இலை துளிர்த்து பசுமையில் திளைத்தது செழித்தது பொய்யன்று அதே மரத்தின் உரமாய் மாற வாடி உதிர்கையில் அது வரைந்து செல்லும் பிரிவின் துயர் பொய்யன்று நீல மேகத்தின் பரப்பில் அந்த தூய நீர்துளி மிதந்த கதை பொய்யன்று உலகம் மகிழ அது தன்னைப் பிரித்து உவர் கடலில் விழும் காட்சியும் பொய்யன்று இனிய இறந்தகால பக்கங்களின் மனிதர்களும் மகிழ்வுகளும் நிகழ்வுகளும் நட்புகளும் நானும் பொய்யன்று இந்த நிகழ்காலத்தில் தொடரும் மாறா நினைவுகளும் பிரிவுகளும் மாற்றங்களின் தேவைகளும் பொய்யன்று

Lover's Marriage (காதலியின் திருமணம் )

Image

ஆசைதான் எனக்கு !!!!!

Image
மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை... வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழகை ரசிக்க ஆசை... தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை.... அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்வனாய் அவள் இடைக்கிள்ள ஆசை... யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை... குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை.... யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை..... முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு அமர்த்து வெகுதூரம் செல்ல ஆசை... மழை நேரத்தில் ஒரு குடைக்குள் அவளுடன் இருக்க ஆசை.... மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனிகொண்டு துடைக்க ஆசை.. என் உயிர் சுமக்கும் அவளை அன்று என் கண்ணுக்குள் வைத்து பார்க்க ஆசை... என் உயிர் பிறந்த பின்பும் அவள் முகம் முதல் பார்க்க ஆசை... இப்படியே 60 ஆண்டு காலம் அவளோடு நான் வாழ ஆசை... 60 ஆன பின்பும் அவள் முகத்தில் விழுந்த ரேகையும் கன்னத்தில் விழுந்த குளியையும் மூக்கு கண்ணாடி போட்டு ரசிக...

நீ வேண்டும்...!

Image
உரிமையோடு சண்டை போட உறவாய் நீ வேண்டும்...! அன்புடன் ஆறுதல் கூறும் ஆயுதமாய் உன் வார்த்தை வேண்டும்..! தட்டி கொடுத்து தூங்க வைக்கும் தூணாய் உன் தோள்கள் வேண்டும்..! நான் பார்க்கும் முதல் முடிவாய் என்றும் உன் முகம் வேண்டும்..! கடைசி வரை கைவிடாமல் என் பதியாய் நீ வேண்டும்..! வருவாயா பெண்ணே துணையாய் என் உயிரின் இறுதிவரை..!!

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

Image
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…!! நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்! இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு. நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு… வாழ்க்கை இதுதா...

அப்பாவுக்கு மகள் எழுதுவது

Image
>கண்மூடி உன் கைகளில்  கிடந்த போது...  எனக்கான கனவுகளை  நீ சுமந்தாய்...!  >ஆறடி உயரத்தை  அரையடியாய் குறுக்கி  அம்பாரி நான் ஏற..  ஆனந்தமாய் நீ ரசித்தாய்...! >'அ' எழுதியதற்கே...  'அறிவாளி என் மகள்' என  ஆனந்த கூத்தாடினாய்...! >என் ஆசைகளுக்கு  அஸ்திவாரமிட்டதில்  உன் தேவையை  நீ மறந்தாய்...! >இரவும் பகலும்  எனையே நினைத்தாய்...!  உன் வியர்வையை சிந்தி  உணவை தந்தாய்...! >கல்யாணம் செய்துவித்து  கடனாளியாகி நின்றாய்...!  நீ கொடுத்த கல்வியால்  பணம் காய்க்கும் மரமாய் நான்...! >வயோதிகமும் வறுமையும்  உன்னை வாட்ட...  ஒரு நூறு உனக்கு கொடுக்க  எனக்கோ உரிமை இல்லை..! >உயர் கொடுத்த உத்தமனே  என்னை மகளாய்  பெற்றதனால்  என்ன சுகம் கண்டாய் நீ? --Thilagavathy  ::::Courtesy:::: >Varamalar-Dinamalar<

கல்லூரி கால நட்பு

"அன்று(During College Life)....... நான் அழுத போதெல்லாம் என் கண்ணீரை துடைத்த முதல் கை என் நண்பன்..!!! வீழ்ந்த போதெல்லாம் தோள் கொடுத்து தூக்கி விட்டவன் என் நண்பன்..!!! தோற்கும் போதெல்லாம் தட்டி கொடுத்து நம்பிக்கை தந்தவன் என் நண்பன்..!!! மற்றவர்கள் எதிர்த்த போதெல்லாம் என் முன்னே நின்று என்னை காத்தவன் என் நண்பன்...!!! ஆனால் இன்றோ.....(After College Life...A few years after that...) "என் சிரிப்பை பகிர்ந்துகொள்ள மட்டும் நீ இல்லையே....! ஏங்குகிறேன் நண்பா! இருந்து விடு என்னுடன் என்றும்..."