Posts

Showing posts with the label nice lines

பெண்ணல்ல நீ எனக்கு

Image
.. நாள் தவறி போனதே என நீ வெட்கத்தோடு உரைத்ததும்.. மார்பில் முகம் புதைத்ததும் மேடிட்ட வயிறு கண்டு முத்தமிட்டு சிரித்ததும்.. புளிப்பு மாங்காய் வேண்டுமென காதோரம் சொன்னதும் கண்ணுக்குள் ஆடுதடி.. மூன்றாம் மாதம் முதல் நீர் இறைக்க தடை போட்டேன்.. ஐந்தாம் மாதம் முதல் கனம் தூக்க தடை போட்டேன்.. ஏழாம் மாதம் தனில் சீமந்தம் செய்தார்கள்.. மஞ்சள் பூசி, வளவி இட்டு திருஷ்டி சுற்றி போட்டாலும் போய்விடுமா உன் அழகு தாய்மையில்.. ஆண்டவன் இருந்திருந்தால் அப்பொழுதே கேட்டிருப்பேன் ஏன் படைத்தாய் ஆண் எனவே மண்ணில் என்னை? தினமும் மாலை கை கோர்த்து நடை பயின்று.. இரவெல்லாம் கண் விழித்து மடி மீது உறங்க வைத்தேன் தாயென்றே உனை.. நாட்கள் நெருங்க, நெருங்க கலவரம் கண் மறைத்து நம்பிக்கை கை பற்றி மார்பனைப்பேன் என் உயிரே..! இறுதியாய் பல் கடித்து வலியென நீ புலம்புகையில் ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை வரும் முன்னே வியர்த்தொழுகும் முகமெல்லாம்.. சில நொடி பொழுதுகளில் வந்தனரே உன் தாயும், என் தாயும் உறவினரும் நண்பருமாய்.. தனியறைக்குள் நீ செல்ல கதறும் ஒலி கேட்டு தாங்கவும் முடியாமல் தனியிடம் அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல் ந...

Hikoo- எல்லாம் பிடிக்கிறது

Image
உன் காதல் உன் பேச்சு உன் அக்கறை உன் கவனிப்பு உன் நிதானம் உன் திறமை எல்லாவற்றிறுக்கும் மேலாக தொலைதூரமாக இருந்து நீ என்னைப்பார்ப்பதும் பார்க்காமல் போல் நடிப்பது கூட.....

இணைந்திடுவோம் புதியநட்பில்..!

Image
என் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் உன்இனிய நட்பினை தொலைத்துவிட்டேன்..! என் துயில்வரை உன் துயில்தொலைத்து நீ அனுப்பும் குறுஞ் செய்திகளை இழந்துவிட்டேன்..! என் சோகங்களை தூரமாய் அனுப்பும் உன் அழகு முகச்சிரிப்பின் முகவரியை கிழித்துவிட்டேன்..! நாம் என்று இருந்த நட்பை ஏதேதோ காரணத்தினால் நான்-நீ'யென்று மாற்றிவிட்டேன்..! இவ்வளவு வலிக்குமென்று சண்டைமுடிவினிலே தெரிந்திருந்தால் மறுகணமே சொல்லியிருப்பேன் மன்னித்துவிடுயென்று நானாக-முன்வந்து..! இனிவேண்டாம் நம்வாழ்வில் இதுபோல ஒருபிரிவு இணைந்திடுவோம் புதியநட்பில் இலக்கணமாய் அனைவருக்கும்..!!

அன்புத் தோழிக்காக சில வரிகள்.......

Image
எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை என்னை விட்டு ஏனோ நீ விலகியதும் இல்லை ! தொடர்ந்து என்னுடன் நீ தொடர்பில் இல்லை ! என் தொடர்பு இல்லாது நீ இல்லை! பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,! பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க  நீ முயலாமலும் இல்லை ! "அழும் வரை அழுதிடு " அடுத்த நிமிடம் உடனே சிரித்திடு என்பாய்! சில சமயம் .......... தோள்மீது கை போட்டு நீ என் தோழன் என்பாய்! சிலசமயம்........ கன்னத்தில் அடித்துவிட்டு  நான் கோபித்துக்கொண்டால், மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் ! நான் கவிதைகள் சொல்லும்போது காதைப் பொத்திக்கொண்டு அருமை என்பாய்! கண்ணீர்விட்டு நான் அழும்போது, காரணங்கள் ஏதுமின்றி நீயும் கரைவாய்! என் தேர்வு நாட்களில் எல்லாம் , வெகு சீக்கிரம் எழுவாய்! என் தேவைகளை புரிந்து புன்முறுவல் தருவாய் ! முடியாது என்று நான் முடங்கும் போதெல்லாம், "முயல் ஆமை " கதை சொல்லியே என்னைக் கொல்வாய் ! இறுதியில் நீயே வெல்வாய் ! உடைபட்ட கல்லாய் இருந்த என்னை "உளியாக" நீ உருமாறி, மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி உயிர் தந்தாய்! என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்ன ...

அன்பு செய்யுங்கள் யாருக்கும் அடிமையாகாதீர்கள்

Image
  இரக்கம் காட்டுங்கள்;எவரிடத்தும் ஏமாந்துவிடாதீர்கள்.. பணிவைப் போற்றுங்கள்;எந்த நிலையிலும் கோழையாகாதீர்கள்.. கண்டிப்பாக இருங்கள்;எப்போதும் கோபப்படாதீர்கள்... சிக்கனமாக வாழுங்கள்;கருமியாக மாறாதீர்கள்... வீரமாக இருங்கள்;போக்கிரிகளாக மாறாதீர்கள்... சுறுசுறுப்பாக இருங்கள்;பதட்டம் அடையாதீர்கள்... தர்மம் செய்யுங்கள்;ஆண்டியாகி விடாதீர்கள்... பொருளைத் தேடுங்கள்;பேராசைப்படாதீர்கள்... உழைப்பை நம்புங்கள்;உருப்படுவீர்கள்... உண்மையை நம்புங்கள்;உயர்வடைவீர்கள்...

Nice Lines

*அழகான உருவங்களைக் கண்டு ஏங்காதீர்கள்-அங்கே  ஆணவம் தலைதூக்கி நிற்கின்றது.  அழகற்ற உருவங்களை ஒதுக்காதீர்கள்-அதற்குள்ளே  ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.   *என்னை நேசிக்க ஒருவர் இல்லையே என்று எத்தனை    உள்ளங்கள் தவிக்கின்றன....  அதே வேளையில் நான் அன்பு செலுத்த   ஒருவரும் இல்லையே        என்று  எத்தனை பேர் தவிக்கிறார்கள்... "நாம் நேசிப்பவர்களாகவும் நேசிக்கப்படுபவர்களாகவும் இருப்போம்"