அன்புத் தோழிக்காக சில வரிகள்.......

எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை என்னை விட்டு ஏனோ நீ விலகியதும் இல்லை ! தொடர்ந்து என்னுடன் நீ தொடர்பில் இல்லை ! என் தொடர்பு இல்லாது நீ இல்லை! பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,! பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க நீ முயலாமலும் இல்லை ! "அழும் வரை அழுதிடு " அடுத்த நிமிடம் உடனே சிரித்திடு என்பாய்! சில சமயம் .......... தோள்மீது கை போட்டு நீ என் தோழன் என்பாய்! சிலசமயம்........ கன்னத்தில் அடித்துவிட்டு நான் கோபித்துக்கொண்டால், மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் ! நான் கவிதைகள் சொல்லும்போது காதைப் பொத்திக்கொண்டு அருமை என்பாய்! கண்ணீர்விட்டு நான் அழும்போது, காரணங்கள் ஏதுமின்றி நீயும் கரைவாய்! என் தேர்வு நாட்களில் எல்லாம் , வெகு சீக்கிரம் எழுவாய்! என் தேவைகளை புரிந்து புன்முறுவல் தருவாய் ! முடியாது என்று நான் முடங்கும் போதெல்லாம், "முயல் ஆமை " கதை சொல்லியே என்னைக் கொல்வாய் ! இறுதியில் நீயே வெல்வாய் ! உடைபட்ட கல்லாய் இருந்த என்னை "உளியாக" நீ உருமாறி, மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி உயிர் தந்தாய்! என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்ன ...