அப்பாவுக்கு மகள் எழுதுவது

>கண்மூடி உன் கைகளில் கிடந்த போது... எனக்கான கனவுகளை நீ சுமந்தாய்...! >ஆறடி உயரத்தை அரையடியாய் குறுக்கி அம்பாரி நான் ஏற.. ஆனந்தமாய் நீ ரசித்தாய்...! >'அ' எழுதியதற்கே... 'அறிவாளி என் மகள்' என ஆனந்த கூத்தாடினாய்...! >என் ஆசைகளுக்கு அஸ்திவாரமிட்டதில் உன் தேவையை நீ மறந்தாய்...! >இரவும் பகலும் எனையே நினைத்தாய்...! உன் வியர்வையை சிந்தி உணவை தந்தாய்...! >கல்யாணம் செய்துவித்து கடனாளியாகி நின்றாய்...! நீ கொடுத்த கல்வியால் பணம் காய்க்கும் மரமாய் நான்...! >வயோதிகமும் வறுமையும் உன்னை வாட்ட... ஒரு நூறு உனக்கு கொடுக்க எனக்கோ உரிமை இல்லை..! >உயர் கொடுத்த உத்தமனே என்னை மகளாய் பெற்றதனால் என்ன சுகம் கண்டாய் நீ? --Thilagavathy ::::Courtesy:::: >Varamalar-Dinamalar<