Posts

Showing posts with the label அப்பாவுக்கு மகள் எழுதுவது

அப்பாவுக்கு மகள் எழுதுவது

Image
>கண்மூடி உன் கைகளில்  கிடந்த போது...  எனக்கான கனவுகளை  நீ சுமந்தாய்...!  >ஆறடி உயரத்தை  அரையடியாய் குறுக்கி  அம்பாரி நான் ஏற..  ஆனந்தமாய் நீ ரசித்தாய்...! >'அ' எழுதியதற்கே...  'அறிவாளி என் மகள்' என  ஆனந்த கூத்தாடினாய்...! >என் ஆசைகளுக்கு  அஸ்திவாரமிட்டதில்  உன் தேவையை  நீ மறந்தாய்...! >இரவும் பகலும்  எனையே நினைத்தாய்...!  உன் வியர்வையை சிந்தி  உணவை தந்தாய்...! >கல்யாணம் செய்துவித்து  கடனாளியாகி நின்றாய்...!  நீ கொடுத்த கல்வியால்  பணம் காய்க்கும் மரமாய் நான்...! >வயோதிகமும் வறுமையும்  உன்னை வாட்ட...  ஒரு நூறு உனக்கு கொடுக்க  எனக்கோ உரிமை இல்லை..! >உயர் கொடுத்த உத்தமனே  என்னை மகளாய்  பெற்றதனால்  என்ன சுகம் கண்டாய் நீ? --Thilagavathy  ::::Courtesy:::: >Varamalar-Dinamalar<