Posts

Showing posts with the label Kavithaikal

ஆயிரத்தில் நானும் ஒருவன் (Share your views)

Image
எனக்கு கிடைத்தால் போதுமென்று(!) கூட்ட நெரிசலில் பேருந்தின்  இருக்கை நோக்கியோடும் பல  ஆயிரம் வீரர்களில் நானுமொருவன்..! வயதான பலர் தள்ளாடும் நிலை  கண்டும் எழுந்து இடம் விடாதே!  என்று  சுயநல முடிவெடுக்கும்-பல  நல்ல(!) மனிதர்களில் நானுமொருவன்..!    கண்முன்னே நடக்கும் அநியாயங்கள் நல்லவேளை எனக்காக வில்லையென   காதிருந்தும் செவிடனாக்கும் கருவிமாட்டும் கனிவுள்ள(!) மனிதர்களில் நானுமொருவன்..! கேரளாயென்ன கர்நாடகா யென்ன  தண்ணீர்த்தர யார் மறுத்தால்  தனக்கென்ன என்று எண்ணும்  பகுத்தறிவாளர்கள்(!) பலருள் நானுமொருவன்..! இல்லாதவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க  ஓராயிரம் முறை யோசித்து-எல்லாம்  இருக்கும் காதலிக்கு இலட்சங்கள்  பரிசளிக்கும் ரோமியோ(!)களில் நானுமொருவன்..!  - Anbuselvam @ Saran 

Farewell day(நம் கல்லூரி கால நட்பு) Feelings of India Day

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற கனவுடன் நுழைந்தேன் கல்லூரிக்குள்...! முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி முதல் நட்பு கிடைக்க, நாளடைவில் எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை இந்த கல்லுரியில்...! நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின் கவலையைப் போக்க போராடியும், என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும் என்று கவனித்த அவர்களின் பாசத்தையும் இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...! என் முகம் வாடிக்கிடக்க, நான் இருக்கிறேன் உனக்காக என்ற குரல் ஒன்று போதும் என் முகம் மலர...! தினம் தினம் நமது கால்கள் ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே இன்பம், துன்பம் அனைத்தையும் பகிர்ந்தபடியே மெல்ல சென்றது கல்லூரி கால நாட்கள்...! இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும் நம் நட்புக்கு முடிவு என்பதே இல்லை என்றும்...! தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!! By, NANCY VINCENT

உனக்காக....

உனக்கே தெரியாமல் உனக்காக எழுதுகின்றேன் உன்னைப்பற்றி என்றாவது ஒருநாள் நீ இதை பார்த்து புரிந்துகொள்வாய ் என்று ஆனால் அன்று உனக்கும் தெரியாது இது உனக்காக என்று -- Via Facebook.. 

ஆசைதான் எனக்கு !!!!!

Image
மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை... வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழகை ரசிக்க ஆசை... தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை.... அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்வனாய் அவள் இடைக்கிள்ள ஆசை... யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை... குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை.... யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை..... முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு அமர்த்து வெகுதூரம் செல்ல ஆசை... மழை நேரத்தில் ஒரு குடைக்குள் அவளுடன் இருக்க ஆசை.... மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனிகொண்டு துடைக்க ஆசை.. என் உயிர் சுமக்கும் அவளை அன்று என் கண்ணுக்குள் வைத்து பார்க்க ஆசை... என் உயிர் பிறந்த பின்பும் அவள் முகம் முதல் பார்க்க ஆசை... இப்படியே 60 ஆண்டு காலம் அவளோடு நான் வாழ ஆசை... 60 ஆன பின்பும் அவள் முகத்தில் விழுந்த ரேகையும் கன்னத்தில் விழுந்த குளியையும் மூக்கு கண்ணாடி போட்டு ரசிக...

உன்னருகில் இருக்கும் வேளைகளில் , Kavithaikal

Image
  உன்னருகில் இருக்கும் வேளைகளில் எந்தன் நேரம் கூட உன் மீதான பொறாமையால் வேகமாக ஓடி விடுகிறது.. உன்னருகில் இருக்கும் வேளைகளில் எந்தன் இமைகள் கூட உன்னை பிரிய விருப்பம் இன்றித் துடிக்க மறுக்கிறது.. உன்னருகில் இருக்கும் வேளைகளில் எந்தன் இதயம் கூட தன் வேலையை மறந்து மயங்கிப் போய் விடுகிறது.. உன்னருகில் இருக்கும் வேளைகளில் எந்தன் மூளை கூட உந்தன் உதடுகள் கூறும் வார்த்தைகளை மட்டுமே சேகரிக்கிறது.. என்ன தான் செய்தாய் பெண்ணே என்னையே நான் மறந்து விட்டேன்..! தொலைந்து விடாதே கனவை போலே.. பிரிந்து விடும் என்னுயிர் என்னை விட்டு..!   

ஒருமுறையேனும் காதலி , Kavithaikal

Image
அழகை அப்போது ரசிப்பாய் ..!   அவள் பற்றிய இருவரிகள் காவியமாகும் உனக்கு..!   அவள் பேசும் வார்த்தைகள் கவிதையாகும் ..! அவள் நினைவுகள்  சித்திரமாகும் ..!    அவளின் செயல்கள் உன் வாழ்க்கையாகும் .. நீயோ மனிதனாவாய் ....!    எழுதியவர் :கவிஞர் K இனியவன்