Saturday 14 December 2013
Wednesday 11 December 2013
Comedy Stories
அப்பா: எப்படி இந்தளவு போன் பில் வந்தது. நான் என் அலுவலகத்தில் உள்ள போன் தான் பயன்படுத்துறேன் . இங்கிருந்து ஒரு போன் கூட செய்வதில்லை.
அம்மா: நானும் அலுவலக போன் தான் பயன்படுத்துறேன் . வீட்ல இருந்து ஒரு போன் கூட பண்றது கிடையாது.
மகன்: நான் என் அலுவலகத்தில் தந்த மொபைல் போன் தான் உபயோகிக்கிறேன்.
அதுவரை அமைதியாய் இருந்த வேலைக்காரனை மூவரும் பார்த்தனர். நானும் என் அலுவலகத்தில் உள்ள போன் தான் உபயோகிக்கிறேன். மற்ற படி எனக்கு எதுவும் தெரியாது. :P
அம்மா: நானும் அலுவலக போன் தான் பயன்படுத்துறேன் . வீட்ல இருந்து ஒரு போன் கூட பண்றது கிடையாது.
மகன்: நான் என் அலுவலகத்தில் தந்த மொபைல் போன் தான் உபயோகிக்கிறேன்.
அதுவரை அமைதியாய் இருந்த வேலைக்காரனை மூவரும் பார்த்தனர். நானும் என் அலுவலகத்தில் உள்ள போன் தான் உபயோகிக்கிறேன். மற்ற படி எனக்கு எதுவும் தெரியாது. :P
Tuesday 10 December 2013
கடவுளை காணவில்லை..!!
ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்
.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.
அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.
கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.
அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.
.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.
அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.
கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.
அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.
Sunday 1 December 2013
Useful Information.. Please Share to your friends..
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக
உள்ளனர் உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க
வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது
தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு
முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க
வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர்
உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு
இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை
ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம்
நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால்
ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக
துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது
பகிருங்கள்.தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை
காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே...!
Monday 25 November 2013
Mummy Enaku Oru Doubtu.. இதை படித்தால் சிரிக்காமல் இருக்கமாட்டீர்கள்
அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள் வீட்டு வாண்டு மாதிரி) படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
இனி...
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்?
அம்மா : அது தூக்கம் வரும்போது தூங்கும்...
அப்பு :எப்ப தூக்கம் வரும்மா?
அம்மா :அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
அப்பு :கொசுக்கு வீடு எங்கம்மா?
அம்மா :அதுக்கு வீடே இல்லை...
அப்பு :ஏம்மா வீடே இல்லை?
அம்மா :அது ரொம்ப சின்னதா இருக்க அதான் விடுஇல்ல...
அப்பு :நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே எனக்கு விடு இருக்கே .....
அம்மா :இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...
அப்பு :அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அம்மா :அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு விடு இல்ல...
அப்பு :கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது?
அம்மா :கடவுள்...
அப்பு :கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
அம்மா :கடிக்காது...
அப்பு :ஏன்மா கடிக்காது?
அம்மா :கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்பு :அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ?
அம்மா :வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு...
அப்பு :கடவுள் நல்லவராம்மா?
அம்மா :ரொம்ப நல்லவர்....
அப்பு :அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அம்மா :அது அப்படித்தான் நீ தூங்கு...
அப்பு :கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அம்மா :அதுக்கு பசிக்குது...
அப்பு :கொசு இட்லி சாப்பிடுமா?
அம்மா :அதெல்லாம் பிடிக்காது...
அப்பு :கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
அம்மா :வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
அப்பு :ஒரே ஒரு கேள்வி மம்மி?
அம்மா :கேட்டுத் தொலை..
அப்பு :கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அம்மா :அதுக்கு பல்லே இல்லை...
அப்பு :பிறகு எப்படி கடிக்கும்?
அம்மா :அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...
அப்பு :பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அம்மா :அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
அப்பு :நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...? :-D
இனி...
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்?
அம்மா : அது தூக்கம் வரும்போது தூங்கும்...
அப்பு :எப்ப தூக்கம் வரும்மா?
அம்மா :அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
அப்பு :கொசுக்கு வீடு எங்கம்மா?
அம்மா :அதுக்கு வீடே இல்லை...
அப்பு :ஏம்மா வீடே இல்லை?
அம்மா :அது ரொம்ப சின்னதா இருக்க அதான் விடுஇல்ல...
அப்பு :நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே எனக்கு விடு இருக்கே .....
அம்மா :இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...
அப்பு :அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அம்மா :அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு விடு இல்ல...
அப்பு :கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது?
அம்மா :கடவுள்...
அப்பு :கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
அம்மா :கடிக்காது...
அப்பு :ஏன்மா கடிக்காது?
அம்மா :கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்பு :அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ?
அம்மா :வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு...
அப்பு :கடவுள் நல்லவராம்மா?
அம்மா :ரொம்ப நல்லவர்....
அப்பு :அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அம்மா :அது அப்படித்தான் நீ தூங்கு...
அப்பு :கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அம்மா :அதுக்கு பசிக்குது...
அப்பு :கொசு இட்லி சாப்பிடுமா?
அம்மா :அதெல்லாம் பிடிக்காது...
அப்பு :கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
அம்மா :வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
அப்பு :ஒரே ஒரு கேள்வி மம்மி?
அம்மா :கேட்டுத் தொலை..
அப்பு :கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அம்மா :அதுக்கு பல்லே இல்லை...
அப்பு :பிறகு எப்படி கடிக்கும்?
அம்மா :அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...
அப்பு :பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அம்மா :அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
அப்பு :நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...? :-D
Saturday 23 November 2013
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.!!
நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.
அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் . "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.
கதையின் நீதி -நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.!!
Friday 22 November 2013
ஆசைதான் எனக்கு !!!!!
மனைவியாய்
இறுதிவரை
ஒரு தோழியாய்
வரப்போகும்
அவள்
யார் என்று அறிய
ஆசை...
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு
முன் எழுந்து
அவள் தூங்கும்
அழகை ரசிக்க
ஆசை...
தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என்
இதழ் சேர்க்க
ஆசை....
அனைவரும் இருக்கும்
நேரத்தில்
கள்வனாய்
அவள் இடைக்கிள்ள
ஆசை...
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில் அவளை
நனைக்க
ஆசை...
குழந்தையாய் அவள்
செய்யும் தவறுகளை
ரசிக்க
ஆசை....
யாரும் இல்லா
சாலையில்
அவள்
கைபிடித்து நடக்க
ஆசை.....
முதன் முதலில்
நான்
வாங்கும் வாகனத்தில்
அவளோடு
அமர்த்து வெகுதூரம்
செல்ல
ஆசை...
மழை நேரத்தில்
ஒரு குடைக்குள்
அவளுடன்
இருக்க
ஆசை....
மழையில் நனைந்த
என் தலையை
அவள்
புடவை நுனிகொண்டு
துடைக்க
ஆசை..
என் உயிர் சுமக்கும்
அவளை
அன்று
என் கண்ணுக்குள்
வைத்து பார்க்க
ஆசை...
என் உயிர் பிறந்த
பின்பும்
அவள்
முகம் முதல்
பார்க்க
ஆசை...
இப்படியே
60 ஆண்டு காலம்
அவளோடு
நான் வாழ
ஆசை...
60 ஆன பின்பும்
அவள் முகத்தில்
விழுந்த ரேகையும்
கன்னத்தில் விழுந்த
குளியையும்
மூக்கு கண்ணாடி
போட்டு ரசிக்க
ஆசை
அன்றும்
கோலுன்றி
அவள் நடவாமல்
என் தோல்
பிடித்து நடக்க
ஆசை...
இறக்கும்
நேரத்திலும்
அவள் மடியில்
என் தலை இருக்க
அவள் முகம் பார்த்து
புன்னகையுடன்
உயிர்பிரிய
ஆசை...!
Monday 21 October 2013
அன்பு
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை.
இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என்
வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண்
அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.
மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை
கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி
அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..
அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.
ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.
அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம்
என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும்
கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு
வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம்
கூறுகிறார்.
அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..
அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக
இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம்.
அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம்
கூறுகிறார்.
அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.
இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில்
அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை
அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன்
கருத்தை கூறுகிறாள்.
இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய
மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன்
மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு
அழைத்துக் கொண்டுவா என்கிறார்.
அப்பெண் வெளியே வந்து
அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு
விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.
அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.
இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது
வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம்.
ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு
செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
# அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.
Tuesday 1 October 2013
Oil Magic - Just For Laugh
Wife calls husband in his office.
Wife: Window is not opening. What shall I do?
Husband: Put some oil and wait for while. It will open. If not, then put more oil and wait.
Wife (little unconvinced): Are you sure?
Husband: Yes, trust me, it will do the magic. Try it.
After a while, husband calls back to check: Did you do as I told you? Did it do the needful trick?
Wife: I don't know about the trick or magic, but now the entire laptop is not starting.
Thursday 26 September 2013
படித்ததில் பிடித்தது-நாய்க்குட்டிகள் விற்பனைக்கு
‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார்
அதன் உரிமையாளர்.
அந்தப் பலகை
குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர்.
அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான்.
"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.
"முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார்.
அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான்.
"எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.
கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க்
கூண்டிலிருந்து ஒரு பெண் இறங்கி நடைபாதை வழியாக ஓடி வந்தாள்.
அவளுக்குப் பின்னால், முடியாலான பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன.
ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது.
பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,
"என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான்.
அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி
சரியாக வளர்ச்சி யடையவில்லை. எனவே எப்போதும் நொண்டித்தான் நடக்கும்,
முடமாகத் தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர்.
சிறுவனின் முகத்தில் ஆர்வம்.
"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."
"அப்படின்னா நீ அதுக்குக் காசு கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்" என்றார் கடைக்காரர்.
அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.
"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்கத் தகுதியானது தான்.
நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட 2.37 டாலர்தான் இருக்கு. பாக்கித் தொகையை மாசாமாசம் 50 சென்ட்டா கொடுத்துக் கழிச்சிடறேன்."
ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.
"பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.
இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது...
குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."
உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான்.
வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப் பட்டை மாட்டப்பட்டிருந்தது.
இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் கொன்னான்.
"என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!"
வாசிக்க கண் கலங்குது !!! பிடிச்சா பகிருங்க !
Saturday 14 September 2013
You think you are the best programmer out there? Well here are some challenges!
|
Friday 13 September 2013
ஹைக்கூ(Hikoo) கவிதை- உனக்காக அங்கு நான்..
கவலைகள் உன்னை
நோகடிக்கும் பொழுது
உன் விழியோரம்
வழியும் நீர்த்துளி
துடைக்க
உனக்காக அங்கு நான்...!
நோகடிக்கும் பொழுது
உன் விழியோரம்
வழியும் நீர்த்துளி
துடைக்க
உனக்காக அங்கு நான்...!
ஹைக்கூ(Hikoo) கவிதை ~ நான்
உன் கண்ணீருக்கு
காரணம்
நானாயிருக்க கூடாது...
உன் கண்ணில்
நீர் வருமென்றால்...
அன்று
நானேயிருக்க கூடாது...!
காரணம்
நானாயிருக்க கூடாது...
உன் கண்ணில்
நீர் வருமென்றால்...
அன்று
நானேயிருக்க கூடாது...!
Saturday 7 September 2013
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும...
-
10144GE003 PRINCIPLES OF MANAGEMENT L T P C-3 0 0 3 UNIT I OVERVIEW OF MANAGEMENT 9 Definition Management - Role of managers -...
-
Download-Deivangal ellam Thotre Pogum.mp3 Dheivangal Ellaam Thotre Poogum Thanthai Anbin Munne Thallatu Paadum Thaain Anbum Thanth...
-
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்க...
-
ECE Department Question Bank Subject Name : ANTENNAS AND WAVE PROPAGATION Branch:ECE Subject...