Saturday 25 July 2015

Hikoo (என்னமோ தெரியவில்லை இன்றென்னை விரட்டி விரட்டி இந்தக் கவிதை தொந்தரவு செய்கிறது)


தேர்வென்றும்
நோயென்றும்
நீ சொன்ன ஏதேதோ காரணங்களால்
பேரன்களை மருமகளை
நீ அழைத்து வராமைக்கு சமாதானப் பட்ட
இந்தப் பாழும் கிழவிக்கு
பத்து நாள் பிடித்தது
உன்னையே நீ அழைத்து வரவில்லை
என்ற உண்மை பிடிபட....


Tuesday 14 July 2015

Hikoo- எல்லாம் பிடிக்கிறது



உன் காதல்
உன் பேச்சு
உன் அக்கறை
உன் கவனிப்பு
உன் நிதானம்
உன் திறமை
எல்லாவற்றிறுக்கும் மேலாக
தொலைதூரமாக இருந்து
நீ என்னைப்பார்ப்பதும் பார்க்காமல்
போல் நடிப்பது கூட.....

Saturday 11 July 2015

The Accident ( Short Story)


போலீஸ்காரரின் போன் அடித்தது
" ஹலோ"
"நீங்க திவ்யாவின் அப்பாவா?"
"ஆமாம். நீங்க"
"நாங்க சாய் ஹாஸ்பிடலிலிருந்து
பேசறோம். உங்க மகளுக்கு ஒரு 
ஆக்சிடெண்ட். உடனே வர முடியுமா?"
பதறியபடி போனார். அங்கே அவர் மகள் ரத்த
வெள்ளத்தில் கிடந்தாள்.
"யாரோ ஒரு பையன். குடிச்சிட்டு வண்டி
ஓட்டிட்டு வந்திருப்பான் போல. வந்தவன்
உங்க மகளோட ஸ்கூட்டில இடிச்சிட்டான்.
ஓவர் ஸ்பீடுங்கறதால் நல்ல அடி. ரெண்டு
பேரயும் பக்கத்தில் நின்றவங்க இங்கே
கொண்டு வந்து சேர்த்தாங்க. "
சொல்லிக்கொண்டே போனாள் நர்ஸ். பைக்
ஓட்டிய பையனை பார்த்த திவ்யாவின்
அப்பா அதிர்ந்தார் 'இவனா?' என
விளரினார்..
சில நிமிடங்களுக்கு முன்...
"ஸ்டாப் ஸ்டாப். ஓரமா பைக்கை நிறுத்து.
குடிச்சிருக்கியா?"
"இல்ல சார்".
"பொய் சொல்லாதே. அதான் வர்ற
வாடையில் எனக்கே போதை வந்திடும்
போல இருக்கே!"
"அது... வந்து.. வந்து..."
"அதான் வந்துட்டியே. அப்புறம் என்ன
வந்து வந்துன்னு உளறுறே.. சரி சரி
எவ்வளவு இருக்கு?"
"சார்..."
"தம்பி ட்ரங்க் அண்ட் ட்ரைவ் தப்புன்னு
தெரியும்ல... அப்புறம் என்ன இருக்கறதை
கொடுத்திட்டு வண்டியை எடுத்துக்க".
" நூறு ரூபாய்தான் சார் கைல இருக்கு"
"பரவாயில்லை. கொடுத்திட்டு போ"
"இந்தாங்க சார்"
நூறு ரூபாயை வாங்கி பாக்கெட்டில்
திணித்தார்.
---
நர்ஸ் கேட்டார் "சார் என்ன சார் யோசனை?
இந்த மெடிசினை வாங்கிட்டு வாங்க
சீக்கிரம்" என்றவாறு ப்ரஸ்கிரிபசனை அவர்
கையில் திணித்தாள் நர்ஸ்.
மருந்தை வாங்குவதற்காக பாக்கெட்டில்
கை விட்டு பணத்தை எடுத்தார். சற்று
முன் அவன் லஞ்சம் கொடுத்த நூறு
ரூபாய் நோட்டும் வெளியே வந்தது.
அதிலிருந்த காந்தி அவரை பார்த்து
சிரித்தது போல தெரிந்தது....!!!
"""" படித்து பிடித்தது """""

Saturday 6 June 2015

Real Life Stories (People now are so insensitive) At least after reading this we should change!!





❝ Today my sister came from office, and I saw she wasn't herself. There were some questions in her eyes. After some time she came to my room sat beside me, leaned against me and started talking.


She said "We don't live; we just focus so much on tomorrow, career, future, money and all these things. And we don't realize how fragile life is and maybe there is no tomorrow".

Now it was getting serious and philosophical so I looked at her carefully.

She said "You remember the cute, nice, marriage card of my colleague I showed you other day?"

I said "Yes, it was creative".

She said "He died in our office today and he was just 32. How could this happen. Bit more than a fortnight of his marriage and he is dead".

I looked into her sullen deep bit wet eyes and said "Yes life is strange, so is death. Poor fellow, tell me how it happened"
She said "He went down to have lunch there he got heart attack and dead after some time. And people are so insensitive; one guy told me that nobody came to help for some time. People don't help until and unless it is their family. The ambulance came 15-20 minute late somebody could have dropped him in his car, maybe he could have been saved."

She paused and started again "You know these were the early days of his marriage and he was so happy and exited, in the morning he was discussing about taking leave tomorrow for pooja (a ritual post marriage), and was bit scared to ask for leave from manger as he just joined office. "

"You know we got to know about him after 2 hours when we saw his chair empty, how people can be so insensitive; everybody was online working as if nothing has ever happened. Nobody went to hospital with him, few went to see him later though. His seat, the Tiffin box was there, the same table, the computer all those notes stuck on the wall, only the chair was empty”

"His phone was locked so they informed his parents so late. When they were putting him on ambulance, doctor said may be he is no more, same time her newlywed wife called. May be she called to know if he got leave for tomorrow. Or to call him early today. We used to tease him as he used to rush back to home early in the evening."

"How many dreams died along with him? I pity on the poor girl his newlywed wife. Now society will eat her like vulture blaming this all on her. She will be cursed, hated, judged, blamed for this thing. She will be shattered to the core. Her dreams washed away her happiness gone, on the top of that society will not let her be in peace to even mourn. Just 18 days back there was grand celebration the best day of her life everything was like fairy tale for her. But now society will not leave any place for her. Her own will become her enemy. Why this happens?"

“I have seen only men dying of heart attack and in such age it is unthinkable. Girls cry, fight but let it come out with tears, men don’t they keep the emotions so much inside may be that causes it. On the top society expects you to be tough ‘Men don’t cry’. Why don’t you tell what is bothering you, why don’t you cry. ”

I just looked at her nodded my head but went in deep thinking on many ‘Whys’. May be there are no answers or answers those I am not ready to see. I still wonder. ❞
~Prakash

Tuesday 19 May 2015

Daily Inspirational Stories- Mom and Child



A little girl was holding two apples with both hands.

Her mum came in and softly asked her little daughter with a smile: my sweetie, could you give your mum one of your two apples?

The girl looked up at her mum for some seconds, then she suddenly took a quick bite on one apple, and then quickly on the other.


The mum felt the smile on her face freeze. She tried hard not to reveal her disappointment.

Then the little girl handed one of her bitten apples to her mum,and said: "Mummy, here you are. This is the sweeter one".

Moral of the Story: No matter who you are, how experienced you are, and how knowledgeable you think you are, always delay judgement. Give others the time and the opportunity to explain themselves. What you see may not necessarily be what you're thinking. Try not to jump to conclusions.


Thinam Oru Thagaval (தினம் ஒரு தகவல்)

There once was a farmer who discovered that he had lost his watch in the barn. It was no ordinary watch because it had sentimental value for him.
After searching high and low among the hay for a long while; he gave up and enlisted the help of a group of children playing outside the barn.
He promised them that the person who found it would be rewarded.
Hearing this, the children hurried inside the barn, went through and around the entire stack of hay but still could not find the watch. Just when the farmer was about to give up looking for his watch, a little boy went up to him and asked to be given another chance.
The farmer looked at him and thought, “Why not? After all, this kid looks sincere enough.”
So the farmer sent the little boy back in the barn. After a while the little boy came out with the watch in his hand! The farmer was both happy and surprised and so he asked the boy how he succeeded where the rest had failed.
The boy replied, “I did nothing but sit on the ground and listen. In the silence, I heard the ticking of the watch and just looked for it in that direction.”
Moral:
A peaceful mind can think better than a worked up mind. Allow a few minutes of silence to your mind every day and see, how sharply it helps you to set your life the way you expect it to be!

Thursday 14 May 2015

FB Posts

Thursday 23 April 2015

ஆயிரத்தில் நானும் ஒருவன் (Share your views)

எனக்கு கிடைத்தால் போதுமென்று(!)
கூட்ட நெரிசலில் பேருந்தின் 
இருக்கை நோக்கியோடும் பல 
ஆயிரம் வீரர்களில் நானுமொருவன்..!




















வயதான பலர் தள்ளாடும் நிலை 
கண்டும் எழுந்து இடம் விடாதே! 
என்று  சுயநல முடிவெடுக்கும்-பல 
நல்ல(!) மனிதர்களில் நானுமொருவன்..!
  
கண்முன்னே நடக்கும் அநியாயங்கள்
நல்லவேளை எனக்காக வில்லையென  
காதிருந்தும் செவிடனாக்கும் கருவிமாட்டும்
கனிவுள்ள(!) மனிதர்களில் நானுமொருவன்..!

கேரளாயென்ன கர்நாடகா யென்ன 
தண்ணீர்த்தர யார் மறுத்தால் 
தனக்கென்ன என்று எண்ணும் 
பகுத்தறிவாளர்கள்(!) பலருள் நானுமொருவன்..!

இல்லாதவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க 
ஓராயிரம் முறை யோசித்து-எல்லாம் 
இருக்கும் காதலிக்கு இலட்சங்கள் 
பரிசளிக்கும் ரோமியோ(!)களில் நானுமொருவன்..! 

- Anbuselvam @ Saran 

Friday 6 February 2015

Farewell day(நம் கல்லூரி கால நட்பு) Feelings of India Day

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள்
என்ற கனவுடன் நுழைந்தேன்
கல்லூரிக்குள்...!

முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி
முதல் நட்பு கிடைக்க, நாளடைவில்
எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை
இந்த கல்லுரியில்...!

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்
என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின்
கவலையைப் போக்க போராடியும்,
என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று
அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும்
என்று கவனித்த அவர்களின் பாசத்தையும்
இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...!

என் முகம் வாடிக்கிடக்க,
நான் இருக்கிறேன் உனக்காக
என்ற குரல் ஒன்று போதும்
என் முகம் மலர...!

தினம் தினம் நமது கால்கள்
ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே
இன்பம், துன்பம் அனைத்தையும்
பகிர்ந்தபடியே மெல்ல சென்றது
கல்லூரி கால நாட்கள்...!

இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும்
நம் நட்புக்கு முடிவு
என்பதே இல்லை என்றும்...!

தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!!

By,
NANCY VINCENT

Thursday 18 December 2014

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-2

இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகனும்"
"நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்"
"என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.
அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.
டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.
இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.
அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.
"தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.
"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார்.
பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க
ஆரம்பித்தான்.
ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.
"ஹலோ முதியோர் இல்லமா?"
"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"
"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக"
முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .
'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.
------------------------------------நன்றி யாரோ ஒருவர்

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-1

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும்
நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்
இருந்தன.
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்
செல்லவும்."...
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப்
போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்
தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.
தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று
விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்
இன்பமயமாகி விடுமல்லவா?

Friday 28 November 2014

Tamil Kavithai - Enaku Vidai Naane(எனக்கு விடை நானே)

தோற்றமோ மாற்றமோ  நிலைகளோ நியதியோ
தினம் தோன்றும் எண்ணப் பிழைகளோ
என்னவென்று நானறியேன்

என் வார்த்தைகள் என்னுடன் பேசுகின்ற சத்தம் மனதில்
சிறு புன்னகை முகத்தில் பதித்து, மன அலைகளை நிறைத்தேன் விழியில்
பெற்றோர்க்கு புதிதானேன் நண்பர்களுக்கும் புதிரானேன் 
உயிர் தோழிக்கும் கேள்வி குறியானேன், எனக்கு நானே பதிலானேன்


வெறுமை களைந்து , கனவுகள் அணிந்து
புதிய கண்ணோட்டத்தில் அன்றாட செயல்கள் காண
பாதைகள் கண்டேன் -அவை
என்னை வரவேற்று அணைக்கக் கண்டேன்

நல்ல மாற்றங்களால் தினம்
நாட்களை அலங்கரிக்கும்
கலையை கற்றேன்
கவலை மறந்தேன்

வலிகள் என்னை சந்திப்பதுண்டு
சில நேரம் வந்து போகும் தலைவலி போல
சில நட்புகள் தந்து போவதுண்டு
மருந்து போன்ற உடனிருப்பை


உலகம் அழகு வரங்கள் பெரிது –இங்கு
அலைபாயாமல் , அதிகம் யோசிக்காமல்
அமைதியாய் நன்றி சொல்ல
காரணங்கள் கணக்கற்றது நாம் நினைத்தால்

என்னை தேடிவரும் எனக்கான நன்மைகள் தினம்
அவற்றை அனுபவித்துச் செல்வதேயன்றி
என்னை தொலைத்து எதையும் தேட
என்றும் அவசியம் இல்லை உலகில்

விமர்சனங்களை கண்டு சிரிக்கிறேன்
வலிமையை உணர்கிறேன்
பரிந்துரைகள் ஏற்கிறேன் -ஆனால்
என்னை நானே இயக்குகிறேன்

கடவுளில் துணை உண்டு காலத்தின் திட்டம் உண்டு
என்றும் குறையாத அன்பு உண்டு, எதையும் கடக்கும் துணிவு உண்டு
என் நாட்களை அழகாக்குவதன்றி –இங்கு

எனக்கொரு பொறுப்புமில்லை

By, 
CARMEL FELIXIA R

Tamil Kavithai- Pirivugal En Parvaiyil (பிரிவுகள் என் பார்வையில்)

சிறகிலிருந்து பிரியும் ஓர் இறகு
மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை
மேகத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளி


ஏனோ வார்த்தைகளின்றி ஊமையான இவற்றால்
சத்தமாய் அறிவிக்க முடியும் நிஜங்களை


விரிந்த சிறகில் சேர்ந்து அந்த இறகு வானில் பறந்த நாட்கள் பொய்யன்று
தனியாய் உதிர்கையில் காற்றில் அது எழுதிச் செல்லும்
நினைவுகளின் காவியமும் பொய்யன்று

அடர்ந்த மரத்துடன் சேர்ந்து இலை துளிர்த்து பசுமையில் திளைத்தது செழித்தது பொய்யன்று
அதே மரத்தின் உரமாய் மாற வாடி உதிர்கையில் அது வரைந்து செல்லும் பிரிவின் துயர் பொய்யன்று

நீல மேகத்தின் பரப்பில் அந்த தூய நீர்துளி மிதந்த கதை பொய்யன்று
உலகம் மகிழ அது தன்னைப் பிரித்து உவர் கடலில் விழும் காட்சியும் பொய்யன்று

இனிய இறந்தகால பக்கங்களின் மனிதர்களும் மகிழ்வுகளும் நிகழ்வுகளும் நட்புகளும் நானும் பொய்யன்று

இந்த நிகழ்காலத்தில் தொடரும் மாறா நினைவுகளும் பிரிவுகளும் மாற்றங்களின் தேவைகளும் பொய்யன்று

Tuesday 1 July 2014

Facebook Posts



Popular Posts