படித்ததில் பிடித்தது



  • இறைவன் கையில் நான் ஒரு பென்சில் மட்டுமே.எழுதுவதெல்லாம் அந்த ஆண்டவன்தான். இந்தப் பென்சிலுக்கு எந்த பெருமையும் இல்லை

                       -------அன்னை தெரசா
  • உலகில் ஒருவனது அறிவின் நல் அடையாளம் அவன் உள்ளத்தில் உருவாகும் கேள்விகளே

                                  -வால்டேர்
  • சிந்தனை மரத்தில்தான் கேள்விப்பூக்கள் சிரிக்கின்றன.

  • உலகில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை காண முடியாது

                                 --------புத்தர்
  • முட்டாளுக்கு எதுவுமே தெரியாது.                                    அரைகுறை அறிவாளிக்கு அனைத்தும் தவறாகவே புரியும்.

  • வாழ்க்கை நதிக்கு சுகமும் சோகமும்தான் இரு கரைகள்
  • முள்ளை விதைப்பது மனமே                                  மலரைச் சொரிவதும் மனமே
  • கண்ணுக்கு அழகு எதுவரை..கையில் கிடைக்கும் நாள்வரை
  • மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் ஆட்சி செய்ய  முடியாது   -------------------------------கண்ணதாசன்
  • நினைவின்றி மனம் போடும் முடிச்சுகள் அவிழ்க்க முடியாதவை
     காலியாக இரு அப்போதுதான் நீ நிரம்பி இருப்பாய்

     தூங்கையிலே விடுகிற மூச்சு சுழிமாறிப்போனாலும் போச்சு

  • ஒவ்வொரு ஆசைக்குப் பின்னாலும் ஒரு துன்பம் தொடர்கிறது
     எளிமையாக வாழ்பவருக்கு சிக்கனமே சீதனம்

     வாழ்வே தவமானால் நிறைவே வரமாகும்

  • மௌனத்தில்தான் மனம் பேசும்விலங்குக்கும் பறவைக்கும் சிரிக்கத்தெரியாது..ஆனால் அவை அன்றாடம் அழுவது கிடையாது
  • சின்னஞ்சிறு விஷயங்களே சம்பூரணத்தை உருவாக்குகின்றன சம்பூரணம் சின்னஞ்சிறு விஷயமில்லை
  • மனிதரின் மனம்போல் மண்ணில் வாழ்க்கை 
  • நிறைய வேலை செய்யாதீர்கள்-ஆனால்                                                       நிறைவாக வேலை செய்யுங்கள்.                              குறைவாக வேலை செய்யுங்கள்-ஆனால்              குறையில்லாமல் வேலை செய்யுங்கள்.
  • வாழ்வே தவம்..வலிகளே வரம்.
  • சிறைப்படுத்தும் கதவுதான்.விடுதலையாக்கும் வாசல்                                நீ கைதியா? சுதந்திரமானவனா?                                                                      கதவின் எந்த பக்கம்                                                                                               நிற்பதென்ற தீர்ப்பை                                                                                                         நீ அல்லவா எழுத வேண்டும்.
  • வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவை.ஒழுக்கம் பற்றிய பாடங்கள் அல்ல. தடுமாற்றம் இல்லாத கவனம், முழுமையான விழிப்புணர்வு. 
  • எந்த செயலுமே சுலபமாவதற்கு முன்  கடினமாக இருக்கிறது.
  • முயலும் வரை முயல்வதல்ல முயற்சி.                                                    முடியும் வரை முயல்வதே வெற்றி.
  • புதிய செயல்களை செய்யத் துணியும் போது                                              இந்த உலகம் முதலில் உன்னை                                                                      ஏளனம் செய்யும்.பின்பு உன்னை எதிர்த்து  நிற்கும்.                              அதன் பின் உன் வெற்றிகளைக்                                                                             கண்டு உன்னைப் பின்பற்றும்.

Comments

Popular posts from this blog

Kanave nee illayel Lyrics , Chennaiyil oru nall-kanave ne illaye lyrics

Thinam Oru Thagaval (தினம் ஒரு தகவல்)

கிறுக்கல்ஸ்(Kirukkals)- 1- Diary of mine ( Brother )