Monday 22 October 2012

படித்ததில் பிடித்தது



  • இறைவன் கையில் நான் ஒரு பென்சில் மட்டுமே.எழுதுவதெல்லாம் அந்த ஆண்டவன்தான். இந்தப் பென்சிலுக்கு எந்த பெருமையும் இல்லை

                       -------அன்னை தெரசா
  • உலகில் ஒருவனது அறிவின் நல் அடையாளம் அவன் உள்ளத்தில் உருவாகும் கேள்விகளே

                                  -வால்டேர்
  • சிந்தனை மரத்தில்தான் கேள்விப்பூக்கள் சிரிக்கின்றன.

  • உலகில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை காண முடியாது

                                 --------புத்தர்
  • முட்டாளுக்கு எதுவுமே தெரியாது.                                    அரைகுறை அறிவாளிக்கு அனைத்தும் தவறாகவே புரியும்.

  • வாழ்க்கை நதிக்கு சுகமும் சோகமும்தான் இரு கரைகள்
  • முள்ளை விதைப்பது மனமே                                  மலரைச் சொரிவதும் மனமே
  • கண்ணுக்கு அழகு எதுவரை..கையில் கிடைக்கும் நாள்வரை
  • மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் ஆட்சி செய்ய  முடியாது   -------------------------------கண்ணதாசன்
  • நினைவின்றி மனம் போடும் முடிச்சுகள் அவிழ்க்க முடியாதவை
     காலியாக இரு அப்போதுதான் நீ நிரம்பி இருப்பாய்

     தூங்கையிலே விடுகிற மூச்சு சுழிமாறிப்போனாலும் போச்சு

  • ஒவ்வொரு ஆசைக்குப் பின்னாலும் ஒரு துன்பம் தொடர்கிறது
     எளிமையாக வாழ்பவருக்கு சிக்கனமே சீதனம்

     வாழ்வே தவமானால் நிறைவே வரமாகும்

  • மௌனத்தில்தான் மனம் பேசும்விலங்குக்கும் பறவைக்கும் சிரிக்கத்தெரியாது..ஆனால் அவை அன்றாடம் அழுவது கிடையாது
  • சின்னஞ்சிறு விஷயங்களே சம்பூரணத்தை உருவாக்குகின்றன சம்பூரணம் சின்னஞ்சிறு விஷயமில்லை
  • மனிதரின் மனம்போல் மண்ணில் வாழ்க்கை 
  • நிறைய வேலை செய்யாதீர்கள்-ஆனால்                                                       நிறைவாக வேலை செய்யுங்கள்.                              குறைவாக வேலை செய்யுங்கள்-ஆனால்              குறையில்லாமல் வேலை செய்யுங்கள்.
  • வாழ்வே தவம்..வலிகளே வரம்.
  • சிறைப்படுத்தும் கதவுதான்.விடுதலையாக்கும் வாசல்                                நீ கைதியா? சுதந்திரமானவனா?                                                                      கதவின் எந்த பக்கம்                                                                                               நிற்பதென்ற தீர்ப்பை                                                                                                         நீ அல்லவா எழுத வேண்டும்.
  • வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவை.ஒழுக்கம் பற்றிய பாடங்கள் அல்ல. தடுமாற்றம் இல்லாத கவனம், முழுமையான விழிப்புணர்வு. 
  • எந்த செயலுமே சுலபமாவதற்கு முன்  கடினமாக இருக்கிறது.
  • முயலும் வரை முயல்வதல்ல முயற்சி.                                                    முடியும் வரை முயல்வதே வெற்றி.
  • புதிய செயல்களை செய்யத் துணியும் போது                                              இந்த உலகம் முதலில் உன்னை                                                                      ஏளனம் செய்யும்.பின்பு உன்னை எதிர்த்து  நிற்கும்.                              அதன் பின் உன் வெற்றிகளைக்                                                                             கண்டு உன்னைப் பின்பற்றும்.

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts