ஆசையோடு ஏற்று கொள்வேன்

ஆயிரம் ஆண்டுகள் தனியே மரமாய் மாறும் சாபமென்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன் பெண்ணே..! என்னிழலில் ஒரு நொடியேனும் நீ இளைப்பாருவாய் என்றால்!! ---------------------------------------------------------------------- என்னுடைய உலகம் என்றும் உன்னை சுற்றியே வட்டமிடும்..! என்னுடைய பாதை யாவும் உன்னை மட்டுமே அணுகவிடும்..! கண்விழிகள் இரண்டும் கூட உன் விழிகளையே தேடியோடும்..! காந்தம்போல என்மனம் தினம் உன் நினைவையே கவர்ந்துவிடும்..!